Archive

Archive for July, 2010

எட்டப்பன் ஆனந்தசங்கரி – பாகம் – 1

July 30th, 2010 No comments

 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்று, தன்னைத்தானே அழைத்துக் கொண்டு வருகின்ற திரு. ஆனந்தசங்கரி அவர்கள், அண்மைக் காலங்களில் அறிக்கைகளையும், ‘பகிரங்கக்  கடிதங்களையும்’ எழுதி வருகின்றார். ‘தமிழீழம் என்பது பகல் கனவு என்றும்’, ‘தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றும்’,  ‘சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் இப்போதைய பிரச்சனைக்கு உரிய ஒரே தீர்வு என்றும்’, ‘தமிழீழத் தேசியத் தலைவருக்குத் தான் எழுதிய கடிதங்களுக்குப் பதில் கிடைக்கவில்லை’ – என்றும் திரு ஆனந்தசங்கரி கூறி வருகின்றார்.