Archive

Archive for July, 2007

கருணாவை இயக்கும் எட்டப்பன்! பாகம்-3

July 31st, 2007 No comments

thumb_ktr ராஜசிங்கத்தாலும், அவருடைய சீடர்களாலும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னும் மௌனமாக இருந்து வருகிறார்கள். இவர்களால் போதைப் பொருட்களுடன் பிடிபட்டு, பல வருடங்களாக ரஸ்யா மற்றும் ஐரோப்பிய சிறையில் வாடும் தமிழ் பெண்கள் பற்றிய செய்திகள் பலர் அறியாத அதிர்ச்சிகரமான உண்மைகளாக இருக்கின்றன. Read more…

கருணாவை இயக்கும் எட்டப்பன்! பாகம்-2

July 31st, 2007 No comments

thumb_ktr இன்று துரோகி கருணாவின் அரசியல் ஆலோசகராக செயற்படும் கே.ரி ராஜசிங்கம் 1940களின் இறுதியில் கணபதிப்பிள்ளை துரைரத்தினத்தின் கடைகெட்ட வாரிசாக பிறந்தவர். இவர் புலோலி மேற்கு பருத்தித்துறையை சொந்த இடமாகக் கொண்டவர். இவருடைய மனைவி சுன்னாகத்தை சேர்ந்தவர்.
Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 17

July 31st, 2007 No comments

caclab0tபிரச்சனையில்லை! போராளிகளைப் பின்வாங்கச் செய்ய வேண்டாம். அவர்கள் தாக்குதலை நடத்திக் கொண்டேயிருக் கட்டும். நான் பார்க்கிறேன் என்று கூறிக்கொண்டே இராணுவத்தினருக்குப் பின்னால் சகபோராளிகளுடன் நிலையெடுத்து முன்னால் தாககுதல் நடத்தும் போராளிகளை தாக்குதலை நிறுத்தும்படி கூறிவிட்டு அவர்களைப் பாதுகாப்பாக நிலையெடுக்கக் கட்டளையிட்டுக் கொண்டு ஜோய் தாக்குதலை மேற்கொண்டான். இதை எதிர்பார்க்காத இராணுவத்தினர் திக்குமுக்காடி சிதறியோடினர். இதில் 20க்கு மேற்பட்ட இராணுவத்தினரும், 20 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. Read more…

எட்டப்பன் ஆனந்தசங்கரி – பாகம் – 2

July 30th, 2007 No comments

thumb_ananda_sankariதிரு ஆனந்தசங்கரி அவர்களினூடாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, திரிபுபடுத்திப் பல கருத்துருவாக்கங்களை, அவரை ஆள்பவர்கள் முன்வைத்து வருகின்றார்கள். எமது கடந்த வாரக் கட்டுரையூடாக, தமிழீழக் கொள்கையில் இருந்து குத்துக்கரணம் அடித்த ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் பின் புலத்தைப் பற்றியும், அவருக்குள்ளே இருக்கின்ற முரண்பாடுகள் பற்றியும், தன்னுடைய புதிய எசமான விசுவாசம் காரணமாக அவர் பேசி வருகின்ற, இந்திய சமஷ்டி ஆட்சி முறையில் உள்ள பொருத்தமற்ற, பொருந்தி வராத தன்மை குறித்தும் தர்க்கித்து, அவரை ஆள்பவர்களுக்குப் பதில் சொல்லியிருந்தோம். Read more…

கருணாவை இயக்கும் எட்டப்பன்! பாகம்-1

July 30th, 2007 No comments

thumb_ktr பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் இன்னும் மற்றைய ஊடகங்களிலும் தமிழினத்தின் மாபெரும் துரோகிகளில் ஒருவன் கருணாவைப் பற்றி செய்திகள் பல்வேறு விதமாக வந்து கொண்டு இருந்தாலும், உண்மையில் இவனுக்கு பின்னால் உள்ள மற்றைய துரோகிகளையும், அவர்களது விபரங்களையும், துரோகத்தனங்களையும், இதற்கான மூலகர்த்தாக்களையும் பலருக்கு தெரியாது. Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 16

July 17th, 2007 No comments

ஜோயின் போரியல் தந்திரங்களும் அதிரடி தாக்ககுதல்களும்.

வந்தாறுமுலை புகையிதர பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்தினர் மீது பதுங்கி தாக்குதலை தானே நேரடியாக களத்தில் நின்று தலைமை தாங்கி நடாத்தி பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரைக் கொன்று ஆயுத தளபாடங்களும் கைப்பற்றினான். இதில் போராளிகளுக்கு எவ்வித இழப்புகளும் ஏற்பட வில்லை.அதை தொடர்ந்து சித்தான்டி காவல்துறை நிலையத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 11

July 17th, 2007 No comments

இதனால் மட்டக்களப்பு மக்கள் மனதில் இருந்த சந்தேகம் அம்சம்பவத்துடன் தீர்ந்தது என்றே கூறலாம். 1987 காலப்பகுதிகளில் மிகமுக்கியமான தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா பொலிஸ் புலனாய்வுத்துறையினரால் மேஜர் கண்ணன் பலதடவை தேடப்பட்டார். இருபபினும் அவர்களால் கண்ணனை ஒன்றும் செய்யமுடியவில்லை. Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 15

July 16th, 2007 No comments

வஞ்சகன் கருணாவால் வஞ்சிக்கப்பட்ட லெப். கேணல் ஜோய்

யார் இந்த ஜோய்?
மட்டு கொம்மாதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை ரகுநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இவன் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தான். Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 14

July 15th, 2007 No comments

நிறா எனும் ஹொலிவூட் நடிகை

மட்டு அம்பாறை தொடர்பகத்தின் மூலம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக  குளிரோடை எனும் குளிர் பான உணவகமும், நீராவியடியில் ஒரு கோழிப்பண்ணையும் இருந்தது. இதில் குளிர்பானக் கடைக்கு ரவி என்பவர் கோழிப்பண்ணைக்கு சான்டோ என்பவர் பொறுப்பாளராக இருந்தனர். சான்டோ கருணாவின் தீவிர விசுவாசிக்கும். Read more…

எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் – பாகம் 13

July 14th, 2007 No comments

நிறா! நிறா! ஓடிவா! அடாவடி செய்து ஓடிவா!  ஜெயாவுக்கு ஆப்புவைக்க ஓடிவா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் 1990 காலப்பகுதியில் போராளிகளாகத் தங்களை இணைத்துக்கொண்டு வலம்வந்த காலகட்டமது. மகளிர் பிரிவில் அரசியல் வேலைகளை முன்னெடுத்து திறம்பட செய்தவரான வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் சுந்தரி யாழ்ப்பாணத்திலிருந்து வாகரை மகாநாட்டிற்கு வந்தவேளையில் பல யுவதிகளை இயக்கத்திற்கு சேர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டார். Read more…