|
குட்டி யாழ்ப்பாணம் என எல்லோராலும் அழைக்கப்படும் பாரிஸ் லாச்சப்லில் அம்மனைக் குறிக்கும் மறு பெயரைக் கொண்ட நபர் ஈபிடிபி யினருடன் இணைந்து கம்பம் அறிவிட்டு வருவதாக பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பலர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலும், தென்னிலங்கையிலும் ஈபிடிபி ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இவ்வாறு கடத்தப்படுவோரை விடுதலைக்கு அம்மனின் மறு பெயரைக் கொண்ட நபரைத் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தினைக் கொடுத்தால் தாயகத்தில் ஈபிடிபியினரால் கடத்தப் படுவோர் விடுவிப்பினமாம்.
ஏற்கனவே ஈபிடிபினரால் கடத்தப்பட்ட சிலரின் உறவுகள் பிரான்சில் குறித்த நபருடன் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் பல ஆயிரம் யூரோக்களை வழங்கி தமது உறவுகளை விடுவித்துள்ளனர்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி ஈபிடிபி டக்ளஸ் தேவானந்தாவுக்கு இன்னொரு பகுதி குறித்த நபருக்கும் கிடைக்கின்றது.
இவ்வாறு கிடைக்கும் பணத்தினை குறித்த நபர் கூட்டு வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் இவ்வாறு பெறப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை லாச்சப்பலில் அண்மையில் திறக்கப்பட்ட ஒரு தமிழ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று புலம் பெயர் நாடுகளில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள், சீட்டிழுப்பில் ஏமாற்றியவர்கள் போன்றோர் கொழும்பு செல்லும் போது ஈபிடிபினரை வைத்து குறித்த நபர் கடத்தப்பட்டு கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கி அவரின் உறவுகளிடமிருந்து கிடைக்கும் பணத்தினை பிரச்சினையை முறைப்பாடாக வைத்தவருக்கு வாங்கிக் கொடுப்பததோடு அதிலும் இவருக்கு பெரும் பணப் பங்கு கிடைக்கின்றது.
அண்மையில் சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா ஜரோப்பிய நாடுகளுக்க பயணத்தை மேற்கொண்ட போது பிரான்ஸ் சென்றிருந்த சமயம் இந்த நபர் ''பென்ஸ்'' மகிழுந்தில் ஏற்றித் திரிந்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் இவரும் டக்ளஸ் தேவானந்தவும் மகிழுந்தில் செல்லும் போது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளதாக அறிந்துள்ளோம்.
ஏற்கனவே இவரது சொத்துகள் சர்வதேச காவல்துறையினரால் முடக்கப்பட்டு அனைத்துலக ரீதியான வர்தக நிறுவனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டடிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
இக்காலப் பகுதியில் இவர் காவல்துறையினரால் பயிற்றுவிக்கப்பட்டு இப்போது பிரான்ஸ் காவல்துறையினருக்கும் தகவல்களை வழங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது. தமிழர்களின் வர்த்தக நிறுவனங்களைப் பார்வையிடும் நிறுவனங்கள் வர்த்தக நிலையங்களுக்குள் பாயப்போவது என்றால் அந்த விடயம் இவருக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது.
அன்புக்குரிய வாசகர்களே மேற்குறிப்பிட்ட நபரின் புகைப்படம் இருந்தால் அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.
|