|
|
|
|
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 5 |
|
|
|
ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின் காட்டிக்கொடுப்பும்!ஜிம்கலித்தாவும் கருணாவின் ஊரான கிரானனைச்சேர்ந்தவர்தான். இவரது குடும்பத்திற்கு அவ்ஊரில் பெரும்மதிப்பிருந்தது.அது மட்டுமல்ல தமிழினப்பற்றுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.ஏனனில் துரோகி கருணாவின் குடும்பத்தினர் ஜக்கியதேசியக்கட்சியை சேர்ந்தவர்கள். அந்தக்கட்சியின் கொள்கையுடனே செயற்பட்டனர்.
பிற்காலத்தில் கருணாவின் சகோதரிகள் ஜக்கியதேசியக்கட்சியின் செல்வாக்கை
பயன்படுத்தி அரசவேலைகளிலும் அமர்ந்தனர். இது கிரானில் உள்ளளர்களுக்கு
தெரிந்த ஒரு விடயம்.
மேலும்,கருணாவின் சகோதரி ஒருவர் ஜக்கியதேசியக்கட்சியியுள்ளவரும் முஸ்ஸிம்
காங்கிரஸ் ஆதரவாளருமான ஒரு முஸ்ஸிம் செல்வந்தரைத் திருமணம் செய்து
முஸ்ஸிம் மதத்தை தழுவி முதூரில் வாழ்கின்றார். மேலும், அவ் முஸ்ஸிம்
செல்வந்தர் ஜிகாத் அமைப்பின் தீவிர ஆதரவாளராக தற்போதும் செயல்பட்டு
வருவதாக அறியமுடிகிறது.
மேலும், ஜிம்கலித்தாத்தாவுடன் ஆரம்பத்திலே குடும்ப ரீதியாக கருணாவுக்கும்
பகை இருந்து கொண்டேயிருந்தது. ஜிம்கலித்தாவுக்கு கிரானில் மட்டும் அல்ல
சகபோராளிகளிடத்திலும் மதிப்பும் மரியாதையும் உயரத்தொடங்கியது. இது
கருணாவின் மனதை பெரிதும் பாதித்தது மட்டுமல்ல சங்கடத்தையும் கொடுத்தது.
கிரான் மக்கள் மட்டுமல்ல மற்றவர்களும் தன்னையே ஒரு தளபதியாக கருதவேண்டும்
கிரான் மக்களினதும் சகபோரளிகளினதின் மனதிலிருந்து ஜிம்கலித்தாவை
துக்கியெறியவேண்டுமென்றும் பல தனிப்பட்ட காரணங்களால் தாத்வை பழிவாங்க
துரோகி கருனா காத்திருந்தான்..!
அதற்கு சந்தர்ப்பம் 1986ன் ஆண்டளவில் வந்தது. நான்கு அல்லது ஜந்து கிலோ
மீற்றர் துரத்த்திற்குள் தற்போது புலனாய்த்துறைப் பொறுப்பாளராகவுள்ள
பொட்டம்மானின் முகாம் உட்பட பல முகாம்கள் இருந்த போதிலும் ஜிம்கலித்தாவின்
முகாமே சிங்கள இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டது.
தனது தன்னிச்சையான அராஜக நடவடிக்கைக்கு பொட்டமான் உட்பட பல தளபதிகள்
எதிராகயிருந்த போதும் தனது முதல் எதிரியான ஜிம்கலித்தாவே கருனா குறி
வைத்தான். எனவே தான் தனது காட்டிக்கொடுப்பு நடவடிக்கையை ஜிம்கலித்தாவின்
முகாமிலே செய்தான். ஆனால் வேறு சில நபர்கள் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு
பார்க்க சிங்கள இராணுவத்தால் அனுப்பட்டு அவர்களுக்கு பணமும்
கொடுக்கப்பட்டது. அவர்கள் பணத்தை அவர்களுக்குள் பங்கீடு செய்யும் போது
எற்பட்ட குழறுபடியால் இக்கதையை கசிய விட்டனர். பின்னர் அவர்கள் கைது
செய்யப்பட்டு தண்டனையும் கொடுக்கப்பட்து. இருப்பினும் இப்படியான ஒரு
முகாம் இருப்பதையே சிங்கள இராணுவத்தினருக்கு காட்டிகொடுத்தவன் துரோகி
கருணாவாகும். அதன்பின்னர்தான் ஜிம்கலித்தாவின் முகாமை வேவு பார்க்க சிங்கள
இராணுவத்தினரால் அந் நபர்கள் அனுப்பட்டனர்.அவர்கள் மாடு தேடுவர்கள் போலவே
சென்றனர்.
மேலும்,கருணா எந்த முறையில் சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்தான்
என்பது தெரியாது. ஆனால் துரோகி கருணாவின் வடமுனையைச் சேர்ந்த உறவுக்காரர்
ஜிம்கலித்தாவின் முகாம் எப்படி காட்டிகொடுக்கப்பட்டது என்பதனை மதுபோதையில்
உளறினார். இவர் மதுபோதையில் உளறுகின்றார் என்றும் ”குடிகாரன் பேச்சு
விடிந்தால் போச்சு”என்று கூறி அந்நபரை பின்னர் துரோகி கருணாவின் சகாக்கள்
அடித்து நொறுக்கினர் பின்னர் அவர் வாய்திறக்கவில்லை! அதன் பிறகு அந்நபரும்
கானாமல் போய்விட்டார்.
மேலும், இச்சுற்றிவளைப்பில் ஜிம்கலித்தாத்தா உட்பட மெட்டைகஜன் மற்றும்
கிரானை சேர்ந்த 6 போராளிகளும் மற்றும் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த
மட்டக்களப்பில் வசித்து பின்னர் போராளியான ஓருவர் உட்பட பத்து பேர்
வீரச்சாவடைந்தனர்.
மேலும்,இச்சுற்றிவளைப்பு லெப்.கேணல் குமரப்பா தலமையில் பதில் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டு முறியடிக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது..,இச்சுற்றிவளைப்பில் செங்கலடியைச்சேர்ந்த
சீனிப்போடியாரின் மகனான சுதா (தற்போது நோர்வேயில் வசிக்கிறார்)மற்றும்
வழைச்சேனையைச்சேர்ந்த கப்டன் வில்லியம் போன்றோர் தப்பினர்.மேலும் சுதா
சயினைட் அருந்தி உயிர்தப்பியவர் என்பது குறிப்பிடதக்கது. அந்த காலபகுதியல்
மிகப்பெரிய சுற்றிவளைப்பாகவே இது கருதப்பட்டது.
மேலும், ஜிம்கலித்தா எதிரியுடன் கடைசிவரை போராடி இறுதில் வீரச்சாவை
அடைந்தார்.ஜிம்கலித்தாவின் தற்கொடை உணர்வும் தேசியப்பற்றும்
தென்தமிழிழமக்களிற்கு எடுத்துக்காட்டும் கிரான் மண்னே பெருமை கொள்ள
கூடியதும் போற்றக் கூடியதுமான ஒரு மாவீரருமாவார்.
மேலும், ஜிம்கலித்தாவின் CZ பிஸ்டல் 1990யில் கருனாவால் கண்டெடுக்கப்பட்டு
அது பிற்பகுதியில் ஒரு அயோக்கியனுடனிடம் ஒப்படைக்கப்பட்டு அது எந்த
வழியில் பயன்பட்டது என்று வரும் தொடர்களில் பார்ப்போம். பொறுத்திருங்கள்
கருணாவின் கிரிமினல்கள் தொடரும்…
வாழ்க தமிழ்த் தேசியம்.
தொடரும்.....
|
|
|
|
|
|
விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி!
|
|