|
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 4 |
|
|
|
கயவன் கருனாவின் முதல் படுகொலை கருனா மட்டக்களப்பு மாவட்டத்தில் புலனாய்வுத்துறை பொறுப்பெடுத்தவுடன் தலமைப்பீடத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காவவும் தனக்கு இயக்கத்துக்குள் ஒர் பலமான இடத்தை பிடிப்பதற்காகவும் தனது கபடத்தான சிந்தனையுடன் தனது புலனாய்வு நடவடிக்கைளை மேற்கொண்டான்.
தான் பிறந்த கிராமமான கிரானில் மக்களிடம் தனக்கு செல்வாக்கு வேண்டும்
மற்றும் எல்லோரும் தன்னை கண்டால் பயபக்தி அவர்களுக்குள் ஏற்படவேண்டும்
என்றும் கருணா நினைத்தான். இதற்காக பினைத்தைத் தேடும் ஒநாய் போல
அலைந்தான். அவ்வேளையில் கருனாவின் வலையில் சிக்கினான் கிரானைச்சேர்ந்த
அப்பாவித்தமிழன்.
அந்த பொது மகன் சயனைட் வைத்திருந்தான் என்றும், தான் இயக்கபோராளி என்று
எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருந்தான் மற்றும், தனிப்பட்ட ரீதியான செயல்கள்
செய்தான் என்றும் கருனாவால் கைது செய்யப்பட்டான்.
அந்த பொதுமகனை கருணாவும் சந்திவெளியை சேர்ந்த மதியும் சித்திரவதை
செய்தனர். மதி என்பவன் கருணாவின் தனிப்பட்ட விசுவாசியாகயிருந்தவன். அந்த
மதி யார்? அவனின் பின்னனி என்ன? இறுதியில் அந்த துரோகியின் கதி என்ன
என்றெல்லாம் பிற்பகுதியில் பார்ப்போம்.
மேலும்,அந்தப்பொதுமகனை மதி மண்வெட்டியால் அடித்து கொன்றான். ஒரு இராணுவ
உளவாளியை தாம் கைது செய்து கொன்று விட்டதாக கருணா கதைபரப்பினான்.
இப்படுகெலையை மட்டக்களப்பின் தமிழிழவிடுதலைப்புலிகளின் மூத்த
உறுப்பினர்களில் ஒருவரான மாவீரர் ஜீம்கலித்தாத்தா கடுமையாக எதிர்த்தார்.
இப்படுகொலைச்செய்த மதியை இயக்கத்தை விட்டே துரத்த வேண்டும். கருணாவுக்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இந்த ஜிம்கலித்தாவும் கிரானை
சேர்ந்தவர்தான் என்பது குறிப்பித்தக்கது. இதனால் கருனாவுக்கும்
ஜிம்கலித்தாவுக்கும் முறுகல் நிலை கூட ஏற்பட்டது. அப்போது ஜிம்கலித்தாவின்
குரல் எதிரொலிக்கவில்லை.
அப்போதைய சூழ்நிலையில் உண்மையான நிலை தலைமைப்பீடத்திற்கு கருணாவால் கூறப்படாமல் மறைக்கப்பட்டது. கருணாவின் காட்டில் மழை!
கருணா கயவனாக இனி காலடி வைக்க தொடங்கிறான் ஆதலால் இனி கயவன் என்றே தொடரலாம்…
கருணாவும் மதியும் அதாவது கயவர்கள் இருவரும் நமட்டு சிரிப்புடன்
கைகுழுக்கிக்கொண்டார்கள். எப்படி இனிக் காய்களை நகர்த்துலாம் என கருணா
என்ற அந்தக்கயவன் ஆழமாகச்சிந்தித்தான்.
பல கயவத்தனங்கள் அவன் சிந்தனையில் நிழலாடினாலும் தான் இயக்கத்தில் வேகமாக
வளரவேண்டும் தன்னை நிலப்படுத்த என்ன செய்யலாம் என திட்டமிட்டான்.
பொறுத்திருங்கள் மட்டக்களப்பு வருங்கால தளபதியாக வரவிருந்த கிரானை
சேர்ந்த ஜிம்கலித்தாவின் முகாம் சுற்றி வளைப்பும் கருணாவின்
காட்டிக்கொடுப்பும்! வாழ்க தமிழ்த் தேசியம்.
தொடரும்.....
|