|
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 2 |
|
|
|
இதுவரை காலமும் என்மனதை அரித்துக் கொண்டிருந்த இந்தச் சம்பவங்களை எழுதுவதால் நான் விட்ட பிழைக்கு பிராயச்சித்தமாகி விடுதல் என்ற ஓர் ஆத்ம திருத்தியடைகிறேன். இத்தொடரைத் தொடர்ந்து வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குக் கூட இது பெரும் அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.
ஏனெனில் கருணாவின் அருகிலிருந்தபடியால் அந்தத் துரோகியின் உணர்வுகள் கபட
நடவடிக்கைகள் அவன் புன்னகைக்குள் மறைந்திருந்திருக்கும் நயவஞ்சனை
என்பவற்றை மறைந்திருக்கும் நயவஞ்சனை என்பவற்றை நேரடியாகக் கண்டவன் நான்
என்பதால் இத் தொடரை எழுதுவதற்கு எனக்கு இலகுவாக உள்ளது. அதற்கு ஒரு
சந்தர்ப்பம் கிடைத்ததிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்..
மேலும் ஜரோப்பாவில் மட்டுமல்ல இலங்கை உட்பட வேறு வெளிநாடுகளில் வாழும்
கருணா என்ற துரோகிக்குச் சபாரம் வீசப் பிரதேசவாதம் பேசும் பித்தலாட்டக்
காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
மீண்டும் மீண்டும் உங்கள் உடம்பெல்லாம் பிரதேசவாதம் என்னும் சேற்றை
பூசுகிறீர்கள். எட்டப்பன் என்ற பெயரை தொட்டு நிற்காதீர்கள். உங்கள்
காதுகளை எட்டாத பல விடயங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன் எனவே இத்
தொடரில் நீங்கள் தெளிவடைந்து தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு கொடுப்பீர்கள்
என எண்ணுகின்றேன். தொடரும்.....வாழ்க தமிழ்த் தேசியம்.
|