|
எட்டப்பன் கருணாவின் மறுபக்கம் - பாகம் 1 |
|
|
|
நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப் போரை பல சோதனைகளுக்கும் நம்பிக்கைத் துரோகங்களிற்கும் ஈடுகொடுத்து அதை வழிநடத்திச் செல்லும் எங்கள் தேசியத் தலைவருக்கும் அவருக்குப் பக்கபலமாக உள்ள விசுவாசமான தளபதிபதிகளுக்கும் போராளிகளுக்கும் தமிழ் தேசியத்திற்கும் உறுதுணையான மக்களுக்கும் நான் எழுதப் போகும் தொடரின் உண்மைச் சம்பவங்களை இதுவரை காலமும் தலைமைக்குக் கூட மறைத்ததிற்கு மன்னிப்புக்கோரி நிற்கிறேன்.
மேலும் நான் இந்தக் கபடதாரியும் நம்பிக்கைத் துரோகியுமான கருணாவின்
தில்லுமுல்லுகளைப் பலவருடத்திற்கு முன்னரே கூறியிருப்பேனானால் இந்தத்
தொடரில் வரும் சம்பவங்களைப் போல் ஏற்பட்டிருக்கும். அதாவது கடைசியாகத்
தனது பிரச்சனையைத் தெரிந்து தலைமைக்குக் கூற முற்பட்ட போராளிக்கு எப்படிக்
குளிர்பானத்தில் சயனைட் கலந்து கொன்றானே அப்படி எனக்கும் நடந்திருக்கும்.
மேலும் தமிழீழப்போரை கொச்சைப்படுத்தி அடாவடி செய்த இந்தக் கயவன் கருணாவின்
மூச்சை எப்போதோ என் துப்பாக்கி நிறுத்தியிருக்கும். ஏனெனில் அருகிலிருந்த
எனக்கு இது பெரிய காரியமாக அப்போது இருக்கவில்லை. ஆனால் அந்த அயோக்கியன்
அன்று மரவீரராகியிருப்பான் நானோ துரோகியாகியிருப்பேன். தொடரும்.....வாழ்க
தமிழ்த் தேசியம்.
|